ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸின் அந்த நான்கு வீரர்கள் யார்?

Updated: Fri, Jul 16 2021 12:26 IST
IPL 2022 Mega Auction: 4 Players That Delhi Capitals Might Retain (Image Source: Google)

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14வது சீசனில் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே பரவிய கரோனா பரவல் காரணமாக இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எஞ்சியுள்ள தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் 15 வது சீசன் 10 அணிகளுடன் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்கள் ஏலம் மெகா ஏலமாக நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதன் படி 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரோ அல்லது இரண்டு இந்திய வீரர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் என எப்படி வேண்டுமானாலும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணியில் தக்கவைக்க வேண்டிய நான்கு வீரர்கள் குறித்து முடிவு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லி அணி தக்கவைக்க நினைக்கும் 4 வீரர்கள் குறித்து பார்ப்போம்.

அதன்படி அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக சந்தேகமே இன்றி அந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தற்காலிக கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரை தக்கவைக்கும் என்று தெரிகிறது. அதேபோன்று வெளிநாட்டு வீரர்களில் கடந்த சில ஆண்டுகளாக டெல்லி அணியின் நட்சத்திர வீரராக விளங்கிவரும் காகிசோ ரபாடாவை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் நான்காவது வீரராக மார்கஸ் ஸ்டோய்னிஸ் அல்லது சிம்ரான் ஹெட்மயர் ஆகிய இருவரில் ஒருவரை டெல்லி அணி தக்கவைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேசயமயம் அஸ்வின், ரஹானே ஆகிய இந்திய வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவார்களா என்பது சந்தேகம் தான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை