ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராடி வருகின்றனர். இதில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

Advertisement

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் நிகழ்வு மழை காரணமாக சுமார் 45 நிமிடங்கள் தாமதமானது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் இன்றைய போட்டிக்கான கேகேஆர் அணி 4 மாற்றங்களுடன் களமிறங்கியது. 

Advertisement

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இதில் லிட்டன் தாஸ் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய வெங்கடேஷ் ஐயர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். ஒருமுனையில் ஜேசன் ராய் நங்கூரம் போல் விக்கெட்டை இழக்காமல் இருந்தார். 

அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் நிதீஷ் ரானா 4 ரன்களிலும், மந்தீப் சிஅங் 12 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், சுனில் நரைன் 4 ரன்களிலும் என வந்த வேகத்திலேயே அடுத்தடுத்து நடையைக் கட்டினர். அதன்பின் அரைசதம் அடித்து ஆறுதலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராயும் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து வந்த அனுகுல் ராயும் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழக்க, உமேஷ் யாதவ் 3 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இறுதிவரை களத்திலிருந்த ஆண்ட்ரே ரஸல் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளைசினார். இருப்பினும் 20 ஓவ்ர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 4 சிக்சர், ஒரு பவுண்டரி என 37 ரன்களைச் சேர்த்திருந்தார். டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News