லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை முதல் லக்னோவில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது வானம் கிளியரான நிலையில் உள்ளது. ஆதலால், இன்றைய போட்டி கண்டிப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லி காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதற்கு முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லீ ஐபிஎல் தொடரிலிந்து விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக டேவிட் வில்லி களமிறக்கப்பட்டார். தற்போது அவரும் காயம் காரணமாக விலகியுள்ளார். ஆதலால், அவருக்குப் பதிலாக இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்த கேதர் ஜாதவ், 2016 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றார். இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்த ஜாதவ் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார். 2021 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்த ஜாதவ், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் விலை போகவில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஃபாஃப் டூப்ளெசிஸ், விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஆர்சிபி அணிக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த வீரரும் இல்லாத நிலையில் தற்போது சிறந்த ஆல்ரவுண்டரான கேதர் ஜாதவ்வை பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மராத்தி மொழிக்காக ஜியோ சினிமாவின் வர்ணனையாளராக கேதர் ஜாதவ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தான் மீண்டும் ஆர்சிபி அணியில் இடம் பெற்றுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News