ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பதற்கு 214 ரன்கள் குவித்தனர். 215 ரன்கள் இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Advertisement

அதன்பின் இறுதியில், டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை அப்படியே எடுத்துச் சென்று பினிஷ் செய்து கொடுத்தனர். இதன்மூலம் 18.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 

Advertisement

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த வெற்றி பெற்ற அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “2006-07ஆம் ஆண்டுகளில் டி20 போட்டிகள் துவங்கிய காலத்தில் 150 ரன்கள் அடித்தாலே அது வெற்றி பெறக்கூடிய ஸ்கோர். இப்போது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பது மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கிறது. நான் ஆராய்ந்து பார்த்த போது, இந்த சீசனில் சராசரி ஸ்கோர் 180 ஆகும். அந்த அளவிற்க்கு மாறிவிட்டது.

சூர்யாகுமார் யாதவ் ஸ்டம்பிற்கு பின்னே அடிப்பதில் பலம் கொண்டவர். அதை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார். இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இன்று அபாரமாக பேட்டிங் செய்தார்கள். இந்த சீசன் துவங்குவதற்கு முன்பு வீரர்கள் அனைவரிடமும் நான் பேசியபோது, ‘நாம் அனைவரும் இணைந்து நமக்கு என்ன கிரிக்கெட் வருமோ அதை செயல்படுத்த வேண்டும். 

அதற்கான முடிவுகள் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டாம். வெற்றியோ தோல்வியோ நாம் நம்முடைய திட்டத்திலிருந்து மாறுபட வேண்டாம். அதில் பிடிப்புடன் இருக்க வேண்டும்.’ என்றும் பேசிக் கொண்டிருந்தேன். அதைத்தான் செயல்படுத்தி வருகிறோம். கிஷான் கிஷன் மிகவும் பலம் பொருந்திய வீரர். இன்று விளையாடிய நிறைய ஷார்ட்களை அவர் வலைப்பயிற்சியில் தீவிரமாக பயிற்சி செய்தார். கடந்த இரண்டு மூன்று வாரங்களாக நான் கண்காணித்து வருகிறேன். கூடுதலாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

டெத் ஓவர்களில் நாங்கள் ஒரு சில ஓவர்களை இன்னும் கட்டுப்பாடோடு வீசவேண்டும். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 200 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்துவிட்டோம். மேலும் இதுபோன்ற ஸ்கோர்களை சேஸ் செய்யும் அழுத்தமான சூழலில் தான் நம்முடைய சிறந்த ஆட்டமும் வெளிப்படும் என்று பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News