ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 39ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்னஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குயின்டன் டி காக் நீக்கப்பட்டு ரஹ்மனுல்லா குர்பாஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை வழக்கம் போல் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். 

Advertisement

இருவரும் பொறுப்புடன் விளையாடி தங்களுடைய அரைசதங்களை பூர்த்தி செய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லரும் அதிரடியாக விளையாட ஸ்கோரும் மளமளவென உயர்ந்ததுடன், இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 60 ரன்களைத் தாண்டியது. 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 90 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ராகுல் திவேத்தியாவும் ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 8 பவுண்டரிகளுடன் 41 ரன்களையும், ஷாரூக் கான் 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்துள்ளது. கேகேஆர் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News