ஐபிஎல் 2025: ஆவேஷ் கான் அபாரம்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Sat, Apr 19 2025 23:48 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடாததை அடுத்து ரியான் பாராக் கேப்டனாக செயல்படுகிறார். மேற்கொண்டு அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அதன்படி அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் நடையைக் கட்டிய நிலையில், அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்கள் நிக்கோலஸ் பூரன் 11 ரன்களுடனும், கேப்டன் ரிஷப் பந்த் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தான்ர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் மற்றும் ஆயூஷ் பாதோனி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

மேற்கொண்டு இருவரும் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஐடன் மார்க்ரம் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 66 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்த ஆயூஷ் பதோனியும் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்களுடன் நடையைக் கட்டினார். இறுதியில் அப்துல் சமத் 4 சிக்ஸர்களுடன் 30 ரன்களையும், டேவிட் மில்லர் 7 ரன்களையும் சேர்க்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில், வைபவ் சூர்யவன்ஷி எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸரை விளாசி தனது வருகையைப் பதிவுசெய்தார். அதன்பின் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தி உயர்ந்தது. இதில் ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். 

இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த வைபவ் சூர்யவன்ஷி 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதீஷ் ரானாவும் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்த இன்றைய கேப்டன் ரியான் பராக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 74 ரன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களைச் சேர்த்திருந்த ரியான் பராக்கும் அடுத்தடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் ஷிம்ரான் ஹெட்மையர் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடிக்க, கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலை ஏறப்பட்டது. அப்போது இன்னிங்ஸின் கடைசி ஓவரை ஆவேஷ் கான் வீசிய நிலையில், அதில் ஷிம்ரான் ஹெட்மையர் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு களமிறங்கிய ஷுபம் தூபேவும் பவுண்டரிகளை அடிக்க தவற, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூபப்ர் ஜெயண்ட்ஸ் அணியானது 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை