ஐபிஎல் 2025: வில் ஜேக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ,ராஜஸ்தான் ராயல்ஸ் ம்ற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 56ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மாவும் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த் வில் ஜேக்ஸ் - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அபாரமாக விளையாடி வந்த வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 35 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த வில் ஜேக்ஸும் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 53 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் தீர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்கா, இறுதியில் அதிரடியாக விளையாடிய கார்பின் போஷ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ரஷித் கான், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஜெரால்ட் கோட்ஸி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.