ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 37ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படித்தார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் - பிரியன்ஷ் ஆர்யா இணை வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அதிரடியாக விளையாடிய வந்த பிரியான்ஷ் ஆர்யா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங்கும் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்னிலும், நெஹால் வதேரா 5 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த ஜோஷ் இங்கிலிஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து சூயாஷ் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் பஞசாப் கிங்ஸ் அணி 114 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் இணைந்த ஷஷாங்க் சிங் - மர்க்கோ ஜான்சென் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 31 ரன்களையும், மர்க்கோ ஜான்சென் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் சுயாஷ் சர்மா மற்றும் குர்னால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் ஒரு ரன் மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த தேவ்தத் படிக்கல்லும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையடை வந்த தேவ்தத் படிக்கல் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தன் காரணமாக, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. 

பின்னர் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்த நிலையில் தேவ்தத் படிக்கல் தனது விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த விராட் கோலி தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் விராட் கோலி அரைசதம் கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக அரைசதங்களை பதிவுசெய்த வீரர் எனும் வரலாற்று சாதனையையும் படைத்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதார் 12 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 71 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேற்கொண்டு கடந்த போட்டியில் பஞ்சாபிடம் அடைந்த தோல்விக்கும் ஆர்சிபி அணி இன்றைய தினம் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News