ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நடந்துவருகிறது. இந்த ஏலத்தில் இஷான் கிஷன் ரூ.15.25 கோடி என்ற அதிகபட்ச தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். தீபக் சாஹரை அவர் ஏற்கனவே ஆடிய சிஎஸ்கே அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் அணி ரூ.12.25 கோடிக்கு எடுத்தது.

Advertisement

வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் இவர்தான். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடி என்ற 2ஆவது அதிகபட்ச தொகைக்கு விலைபோனார்.

Advertisement

இவர்கள் எல்லாம் அதிகமான தொகைக்கு விலைபோன அதேவேளையில், சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய வீரர்களாக திகழும் சிலரை எந்த அணியுமே எடுக்க முன்வராமல் அவர்கள் விலைபோகவில்லை என்பது பெரும் அதிர்ச்சி.

ஸ்டீவ் ஸ்மித், அடில் ரஷீத், மார்னஸ் லபுஷாக்னே, டேவிட் மில்லர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பெரிய வீரர்கள் சிலர் விலைபோகவில்லை. இந்த பட்டியலில், ஐசிசி உலக கோப்பைகளை வென்ற கேப்டன்களும் உள்ளனர்.

2019 ஒருநாள் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன் ஈயன் மோர்கனை அவரது அடிப்படை விலையான ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை. கடந்த சீசனில் கேகேஆர் அணியை வழிநடத்திய ஒயின் மோர்கன் சரியாக விளையாடவில்லை. அவரது பேட்டிங் படுமோசமாக இருந்தது. எனவே அவரை தக்கவைக்க விரும்பாத கேகேஆர் அணி, அவரை கழட்டிவிட்டு, ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை எடுத்தது. 

அதேபோல ஆஸ்திரேலிய அணிக்கு கடந்த ஆண்டு இறுதியில் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஆரோன் ஃபின்ச்சும் விலைபோகவில்லை. அவரது அடிப்படை விலையான ரூ.1.5 கோடிக்குக்கூட எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. ஆரோன் ஃபின்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பை வென்றிருந்தாலும், அவரது ஆட்டம் மெச்சும்படியாக இல்லை என்பதால் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News