ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் மொத்தம் 600 வீரர்களும், 10 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

Advertisement

இதில் மார்க்கீ வீரர்கள் எனப்படும் முதல் 10 வீரர்களுக்கான ஏலம் தற்போது முடிந்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் முதல் வீரராக ஷிகர் தவான் இடம்பெற்றார். 

Advertisement

ரூ.2 கோடி ஆரம்ப விலையைக் கொண்ட ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி 8.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன்மூலம் மயங்க் அகர்வாலும் இணைந்து ஷிகர் தவான் தொடக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து இரண்டாவது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியாது. 

மூன்றாவது வீராராக இடம்பெற்ற பாட் கம்மின்ஸை ரூ.7.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் ஏலத்தில் வாங்கியது.

அடுத்ததாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா இடம்பெற்றார். இவரை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்த்தில் எடுத்தது. இவர் முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடினார். 

Advertisement

இந்த ஏலத்தின் 5ஆவது வீரராக நியூசிலாந்து வேகப்பந்துவிச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இடம்பெற்றார். கடும் போட்டிக்கு பிறகு இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

அதன்பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டெல்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இதன்மூலம் அவர் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஏலத்தின் 7ஆவது வீரராக இடம்பிடித்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை ரூ.6.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

Advertisement

இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஃபாப் டூ பிளேசிஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.7 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. முன்னதாக இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர தொடக்க வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதன்பின் மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரரான குயின்டன் டி காக்கை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. 

இந்த ஏலத்தில் 10ஆவது வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இடம்பெற்றார். அவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.6.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News