டி20 உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!

Updated: Sat, Sep 17 2022 14:10 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே எப்போதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மோதலாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான் பார்க்கப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துவிட்டன. அந்தளவிற்கு இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ளார். ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகிய வழக்கமான வீரர்களை தேர்வு செய்துள்ள இர்ஃபான் பதான், தீபக் ஹூடாவை சேர்த்துள்ளார். 

விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய கண்டிஷனில் பெரிதாக ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பு இருக்காது என்பதால் யுஸ்வேந்திர சாஹலை மட்டும் தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். இவர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் பந்து வீசுவார். 

இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை