இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதல்முறையாக நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி உலகக்கோப்பை வெள்ளை காரணமாக இருந்தவர். 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் தோனி. அனைத்து வீரர்களையும் அனுசரித்து செல்வதிலிருந்து பதட்டமான சூழ்நிலையிலும் கூலாக இருந்து அணியை வழி நடத்தியதால் கேப்டன் கூல் என ரசிகர்களாலும் கிரிக்கெட் விமர்சகர்களாலும் அழைக்கப்பட்டவர்.

Advertisement

இன்று இந்திய அணியின் தூணாக விளங்கும் விராட் கோலி,ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்களை வழி நடத்தி வலுவான இந்திய அணி உருவாக காரணமாக இருந்தவர். எல்லா வீரர்களையும் அரவணைத்துச் செல்லும் தோனி வீரர்களில் சிலர் போட்டிகளின் போது தவறு செய்தால் அவர்களை தட்டிக் கொடுத்து தவறை சுட்டிக்காட்டுபவர். 

Advertisement

இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா தோணியுடனான தனது அனுபவம் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு இறுதி மூன்று ஓவர்களில் 40 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இஷாந்த் சர்மா வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என முப்பது ரன்களை விலாசினார் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஃபால்க்னெர். 

இதன் காரணமாக வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்து இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் ஒரே ஓவரில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் மிகவும் விரக்தியில் இருந்திருக்கிறார் இஷாந்த் சர்மா. மேலும் இந்தப் போட்டியில் தன்னால்தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என நினைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக அழுது இருக்கிறார். அப்போது மகேந்திர சிங் தோனி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி பேசிய அவர், “அந்தப் போட்டிக்குப் பிறகு நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன் . இந்திய அணி என்னால்தான் தோற்றது என நினைத்து ஒரு மாதத்திற்கு மேலாக அழுது கொண்டிருந்தேன். எனது மனைவியுடன் அப்போது டேட் செய்து கொண்டிருந்தேன் . தினமும் அவரிடம் தொலைபேசியில் பேசும்போது இதைச் சொல்லி அழுவேன். 

அந்த நேரத்தில் எம்.எஸ். தோனி மற்றும் தவான் ஆகியோர்தான் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தனர் . எனது அறைக்கு வந்த தோனி ‘இஷாந்த் நீ சிறப்பாக செயல்படுகிறாய் நடந்ததை நினைத்து கவலைப்படாதே. நீ ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நினைவில் கொள்’ என தெரிவித்தார். ஆனால் அந்த ஒரு போட்டி தான் என்னுடைய ஒரு நாள் கிரிக்கெட் கேரியரை முடித்த போட்டி என்று தான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News