ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது அதிர்ச்சிகரமாக பந்துவீச்சை தேர்வுசெய்தது. குஜராத் அணிக்கு ஓபனிங் இறங்கி மீண்டும் ஒருமுறை தன்னுடைய ஃபார்மை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 49 பந்துகளில் சதம் விளாசினார். 

Advertisement

இவர் கிட்டத்தட்ட 16 ஓவர்கள் வரை உள்ளே நின்று அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தி ஆட்டமிழந்தார். 60 பந்துகளில் 10 சிக்சர்கள் ஏழு பவுண்டரிகள் உட்பட 129 ரன்கள் அடித்தார். கடைசியில் வந்து இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் உட்பட 28 ரன்கள் அடித்து நல்ல கேமியோ விளையாடிய ஹர்திக் பாண்டியா. 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

Advertisement

எட்ட முடியாத இலக்காக இருந்தாலும் இந்த சீசனில் பலமுறை 200+ ரன்களை சேஸ் செய்துள்ளதால் நம்பிக்கையுடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் 61 ரன்கள், திலக் வர்மா 14 பந்துகளில் 43 ரன்கள், கேமரூன் கிரீன் 20 பந்துகளில் 30 ரன்கள் அடித்துக்கொடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இழக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

இதனால் 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரில் மூன்றாம் இடம் பிடித்து வெளியேறியது. இந்த இன்னிங்சில் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார் மோகித் சர்மா.

போட்டி முடிந்த பிறகு சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை எடுத்தது குறித்து பேசிய அவர், “இன்று ஐந்து விக்கெட்டுகளை எடுத்ததை அதிர்ஷ்டவசமாக நினைக்கிறேன். பந்து ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் அபாரமாக பேட்டிங் விளையாடினர். இவர்களது விக்கெட்டை எடுக்கவில்லை என்றால் இந்த ஸ்கோரும் சேஸ் செய்து விடுவார்கள் என்று எண்ணினேன்.

நான் சூர்யகுமார் யாதவிற்கு பந்துவீசும் பொழுது, புதிதாக எதையும் முயற்சிக்கக்கூடாது. என்னுடைய பலமான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். ட்ரெஸ்ஸிங் ரூமில் அணியினர் மத்தியில் மீட்டிங் நடந்தது. அதில் சூர்5யகுமார் யாதவிற்கு எப்படி பந்துவீசவேண்டும் என்பது குறித்து விவாதித்துவோம். அப்போது அவருக்கு புதிதாக எதையும் முயற்சிக்கக் கூடாது. 

Advertisement

உங்களுடைய சிறப்பான பந்துவீச்சை மட்டும் வெளிப்படுத்தினால் போதும் என்று முடிவு எடுத்தோம். இந்த ஐடியாவை நான் எடுத்துக்கொண்டு சூரியகுமாருக்கு பந்துவீசும்போது செயல்படுத்தினேன். இந்த சூழலில் அவர் ஆறு சிக்ஸர்கள் அடித்தாலும் பரவாயில்லை. அடுத்த ஓவர்கள் மீண்டும் அவருக்கு அதே போல் பந்துவீசி விக்கெட்டை எடுத்து விடலாம் என்று நினைத்திருந்தேன்.

ஏனெனில் அவரை களத்தில் நிற்கவிட்டால் கடைசியில் ஆட்டத்தை மாற்றிவிடுவார். அவரது விக்கெட்டை எடுத்து விட்டால் போட்டி முடிந்துவிடாது என்றாலும், நாங்கள் ஆட்டத்திற்குள் வந்துவிடலாம் என்று நினைத்தேன். என்னுடைய திட்டத்திற்கு ஏற்ப வெளிப்படுத்தியது மற்றும் அவரது விக்கெட்டை எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் போட்டியில் வெற்றி பெற்றது மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சியை கொடுக்கிறது” என்று தெரிவித்தார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News