ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்கால் அணியும், சௌராஷ்டிரா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றும் வரும் இறுதி ஆட்டத்தில், டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஜெய்தேவ் உனாட்கத், சௌராஷ்டிரா அணிக்காக களமிறங்கி அசத்தினார். உனாட்கட் தனது அனுபவத்தையும், திறமையையும் இன்றைய ஆட்டத்தில் வெளிப்படுத்தி பெங்கால் அணி வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். 

Advertisement

ஆசிய ஆடுகளத்தில் கூட இப்படி பந்துவீச முடியுமா என்பதை உனாட்கட் இன்று செய்து காட்டினர்.உனாட்கட் பந்தின் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு பெங்கால் பேட்ஸ்மேன்களால் பதில் சொல்ல முடியவில்லை.

இதே போன்று, இளம் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சூக்கரியா அபாரமாக பந்துவீசியதால் , பெங்கால் அணி பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புக்காக காத்திருந்த பெங்கால் அணியின் அபிமன்யூ ஈஸ்வரன் டக் அவுட் ஆனார்.

மற்றொரு தொடக்க வீரர் சுமந்த் குப்தா 1 ரன்னிலும், சுதீப் குமார் டக் அவுட்டாகியும், கேப்டன் மனோஜ் திவாரி 7 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதனால் 34 ரன்கள் சேர்ப்பதற்குள் பெங்கால் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஷாபாஸ் அகமது மற்றும் அபிசேக் போரேல் ஆகியோர் பொறுப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

அபிசேக் பாரேல் 50 ரன்களிலும், ஷாபாஸ் அகமது 69 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, பெங்கால் அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சௌராஷ்டிரா அணியில் சேத்தன் சுக்கரியா, ஜெய்தேவ் உனாட்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ஜெய் கொஹில் 6 ரன்களிலும், விஸ்வராஜ் ஜடேஜா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் 38 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் சௌராஷ்டிரா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களைச் சேர்த்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News