Ben vs sau
ரஞ்சி கோப்பை 2022/23: இரண்டாவது முறையாக கொப்பையை வென்றது சௌராஷ்டிரா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. இதில் பெங்கால் - சௌராஷ்டிரா அணிகள் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 174 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷபாஸ் அகமது 69 ரன்களும், அசோக் போரெல் 50 ரன்களும் அடித்தனர். அவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. சௌராஷ்டிரா அணியில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் ஜெய்தேவ் உனாத்கத் மற்றும் சேத்தன் சகாரியா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.