ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 24 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் இப்போட்டியில் ரன்களைக் குவிக்க தவறிய போதிலும், ஒரு சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.

Advertisement

அதன்படி இந்தியாவில் அதிக டி20 ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபியின் சாதனையை ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார். ஜோஸ் பட்லர் இந்தியாவில் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மொத்தமாக 563 ரன்களை எடுத்துள்ளார். இதில் நான்கு அரைசதங்களும் அடங்கும். முன்னதாக இந்தப் பட்டியலில், ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியை இந்திய மண்ணில் 25 போட்டிகளில் மூன்று அரைசதங்களுடன் 556 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்தியாவில் அதிக டி20 ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர்

  • ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து) - 20 டி20 போட்டிகளில் 563 ரன்கள்
  • முகமது நபி (ஆஃப்கானிஸ்தான்) - 25 டி20 போட்டிகளில் 556 ரன்கள்
  • குயின்டன் டி காக்(தென் ஆப்பிரிக்கா) - 12 டி20 போட்டிகளில் 458 ரன்கள்
  • கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - 14 டி20 போட்டிகளில் 445 ரன்கள்
  • முகமது ஷாசாத்(ஆஃப்கானிஸ்தான்)- 13 டி20 போட்டிகளில் 435 ரன்கள்

அதேசமயம் தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜோஸ் பட்லர் முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 45.67 என்ற சராசரியில் 137 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் இந்திய வீரர்கள் அபிஷேக் சர்மா (115), திலக் வர்மா (109) ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி குறித்து பேசியனால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பென் டக்கெட் (51), லியாம் லிவிங்ஸ்டோன் (43) ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களைச் சேர்த்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்த்தது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News