ஐபிஎல் 2021: ஹசில்வுட் விலகல்; குழப்பத்தில் சிஎஸ்கே?

Updated: Thu, Apr 01 2021 15:30 IST
Josh Hazlewood (Image Source: Google)

இம்மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர்
கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் விலகியிருக்கிறார். தொடர்ந்து பயோ பபிள்களில்
இருந்து வருவதால் ஓய்வு எடுப்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறார் அவர். ஒரு முக்கியமான
வீரரை இழந்திருக்கும் சூப்பர் கிங்ஸ் அவருக்குப் பதில் யாரை அணியில் சேர்க்கலாம் என்ற
குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சூப்பர் கிங்ஸால் அடிப்படை விலையான 2 கோடி
ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஹேசில்வுட், மொத்தம் 3 போட்டிகளில் மட்டுமே ஆடி, 1 விக்கெட்
மட்டுமே வீழ்த்தினார். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய வீரர்களுடன் அவரும் இந்தியாவுக்கு
வந்து ஐபிஎல் அணியோடு இணைவதாக இருந்தது.

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து தனிமைப்படுத்துதல், பயோ பபிள் என்று
இருந்துவருவதால், ஓய்வு வேண்டுமென்று கூறிய அவர், இந்த 2 மாதங்கள் வீட்டில் தங்கி
குடும்பத்தோடு ஓய்வெடுக்கப்போவதாகச் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் நெருங்கும் சூழலில் ஹசில்வுட் சென்னை அணையிலிருந்து விலகியிருக்கும்
நிலையில், அவருக்கு மாற்றாக யாரை வாங்குவார்கள் என்ற குழப்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணி சிக்கியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை