நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை 2024-25 தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், ஆனாலும் அவரால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இத்தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்த கருண் நாயர், எட்டு இன்னிங்ஸ்களில் 389.50 என்ற சராசரியில் 779 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார். இதில் அவர் ஐந்து சதங்களையும் ஒரு அரை சதத்தையும் பதிவுசெய்தார்.

Advertisement

இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்விலும் கருண் நாயர் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படது. ஆனால் அவர் அபாரமாக செயல்பட்ட நிலையிலும், அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கவலையில் இல்லை என்றும், ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பமுடன் உள்ளதாகவும் கருண் நாயர் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “நான் நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படாதது பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஏனெனில் அந்த வாய்ப்பு எனக்கு மிகவும் தொலைவில் இருந்தது. ஆனால் நான் முன்பு சொன்னது போல், உங்களுக்கு கனவுகள் உள்ளன, உங்களுக்கு எண்ணங்கள் உள்ளன, நீங்கள் விஷயங்களை அடைய விரும்புகிறீர்கள்.

ஆனால் நீங்கள் 'நான் சாதிப்பேன்' என்று நினைக்கவில்லை.'நான் சாதிக்க விரும்புகிறேன்' என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அது நடக்குமா என்பது எப்போதும் உங்கள் தலையில் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும். ஆனால் நான் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கனவு இன்னும் எனக்குள் இருக்கிறது. பல நேர்காணல்களில் நான் அதைச் சொல்லியிருக்கிறேன்.

நேர்மையாகச் சொன்னால், அதுதான் என் மனதில் இருந்தது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் என் பெயர் குறிப்பிடப்படும் அல்லது பரிசீலிக்கப்படும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை, அதனால் நான் அதற்காக மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். இருப்பினும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய கனவு” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்கும் போது, ​​தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், கருண் நாயரின் செயல்திறன் குறித்து தேர்வாளர்கள் விவாதித்ததாகவும், ஆனால் தற்போது அவர் அணியில் இடம் பெறுவது கடினம் என்றும் கூறினார். இருப்பினும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது யாராவது ஃபார்மை இழந்தாலோ அல்லது காயமடைந்தாலோ, அவர் மாற்று வீரராக வைக்கப்படுவார் என்று அவர் உறுதியாளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இந்தியாவுக்காக 2016ஆம் ஆண்டு அறிமுகமான கருண் நாயர் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளார். இதில் அவர் விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் 62.3 என்ற சராசரியுடன் ஒரு சதத்துடன் 374 ரன்களை அடித்துள்ளார். அதில் அவர் 303 நாட் அவுட் என்ற ஒரு முச்சதமும் அடங்கும். இதுதவிர்த்து விரேந்திர சேவாக்கிற்கு பிறகு சர்வதேச டெஸ்டில் முற்சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News