இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 101 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் கூட அடிக்காத போது, தனியாளாக போராடி சதம் அடித்துள்ளார்.

Advertisement

கேஎல் ராகுலின் சதம் குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டை கூர்ந்து கவனித்து வருகிறேன். என்னை பொறுத்தவரை கேஎல் ராகுலின் இந்த சதம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட டாப் 10 சதங்களில் ஒன்றாக இருக்கும்” என்று பாராட்டியுள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்திற்கு பின் 6 மாதம் ஓய்வில் இருந்த கேஎல் ராகுல், ஆசிய கோப்பை தொடரில் இருந்து அபாரமாக விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற புதிய ரோலை எடுத்து கொண்ட கேஎல் ராகுல், இந்திய கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் வீரராக உயர்ந்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்கு முன் ரசிகர்களால் அதிகம் ட்ரால் செய்யப்பட்டவர் கேஎல் ராகுல்.

இதுகுறித்து பேசிய கேஎல் ராகுல், “ட்ரால் செய்பவர்களுக்கு எப்போதும் நமது ஆட்டத்தின் மூலமாக தான் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சுனில் கவாஸ்கர் உண்மையாகவே அப்படி பாராட்டியிருந்தால், அது மிகப்பெரிய விஷயம். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடினால், ஒரு வீரராக மட்டுமல்லாமல், ஒரு மனிதராகவும் சவால்கள் இருக்கும்.

 

கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த போது, ஒரு மனிதனாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. மனதளவில் பல்வேறு விஷயங்களை மாற்றி கொண்டேன். இப்போது பாராட்டும் பலரும், சில மாதங்களுக்கு முன் கடுமையாக விமர்சித்தவர்கள். சோசியல் மீடியாவால் யாரேனும் பாதிக்கப்படவில்லை என்று கூறினால் அது நிச்சயம் பொய் தான். அதில் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு நல்ல மனநிலையில் இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News