இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த போட்டி அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

அந்த வகையில் இன்று இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளயாடிவ் வரும் இலங்கை அணியானது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தி அதிரடியாக விளையாடி வருகிறது.

Advertisement

அதிலும் குறிப்பாக இலங்கை அணி 5 ரன்களுக்கு எல்லாம் முதல் விக்கெட்டை இழந்து தடுமாறிய வேளையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய குசால் மெண்டிஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினார் என்றே கூறலாம். ஏனெனில் இன்றைய போட்டியில் 77 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

அதிலும் குறிப்பாக அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளையும் அவர் இந்த உலகக் கோப்பை போட்டியில் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் உலக கோப்பை போட்டிகளில் இலங்கை அணி சார்பாக அதிவேக சதம் அடித்த வீரராக தற்போது குசால் மெண்டிஸ் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இந்த போட்டியில் வெறும் 65 பந்துகளை சந்தித்திருந்த அவர் சதம் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. 

அதோடு உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையும் இன்று படைத்துள்ளார். மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை விக்கெட் கீப்பராக அதிகபட்ச ரன்களை அடித்த வீரராக இருக்கும் சங்கக்காராவிற்கு (124 ரன்கள்), அடுத்து குசால் மெண்டிஸ் (122 ரன்கள்) இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார். 

அவரது அதிரடி காரணமாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை அணி 36 ஓவர்களிலேயே 255 ரன்களை குவித்து விளையாடி வருவதால் நிச்சயம் 50 ஓவர்களின் முடிவில் குறைந்தது 350 ரன்களாவது அடித்து பாகிஸ்தான் அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News