லெஜெண்ட் லீக் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் ஓய்வு பெற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் - இந்திய மகாராஜாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய மகாராஜாஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி முதலில் விளையாடிய ஆசியா லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கிய இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர்கள் உப்பல் தரங்கா மற்றும் திலகரத்தினே தில்ஷான் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். சிறப்பாக ஆடிய தரங்கா 48 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் உட்பட 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 

Advertisement

இவருக்கு துணையாக விளையாடிய தில்ஷன் முப்பத்தி இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய அப்துல் ரசாக் 17 பந்துகளில் 27 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இந்திய மகாராஜா அணியின் பந்துவீச்சில் சுரேஷ் ரெய்னா இரண்டு விக்கெட்களையும் பிரவீன் தாம்பே ஹர்பஜன்சிங் மற்றும் ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகாராஜா அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 12.3 ஓவர்களில் 158 ரன்களை விக்கெட் இழப்பின்றி செஸ் செய்து வெற்றி பெற்றனர்.

இதில் அதிரடியாக ஆடிய உத்தப்பா 39 பந்துகளில் 88 ரன்களை குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். இவருக்கு உறுதுணையாக ஆடிய கௌதம் கம்பீர் 36 பந்துகளில் 61 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய மகாராஜா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ராபின் உத்தப்பா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News