இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் டி20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா - ஜாஃபனா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற தம்புலா ஆரா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது.

Advertisement

அதன்பின் 73 ரன்கள் சேர்த்திருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆட்டமிழக்க, 54 ரன்களோடு ஃபெர்னாண்டோவும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 10 ரன்களிலும், சமரவிக்ரமா 38 ரன்களோடும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இறுதியில் அதிரடி காட்டிய ஷோயப் மாலிக் 15 பந்துகளில் 32 ரன்களை விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களைக் குவித்தது. தம்புலா அணி தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தம்புலா ஆரா அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜோர்டன் காஸ் 5 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க வீரரான ஷெவன் டேனியல் 29 ரன்களிலும், பனுகா ராஜபக்ஷா 38 ரன்களில், கேப்டன் தசுன் ஷனகா 44 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தம்புலா ஆரா அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஜாஃப்னா கிங்ஸ் தரப்பில் பினுரா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தம்புலா ஆரா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News