Lpl 2022
எல்பிஎல் 2022: மீண்டும் கோப்பையை தட்டிச்சென்றது ஜாஃப்னா கிங்ஸ்!
நடப்பாண்டு லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் ஜாஃப்னா கிங்ஸ்-கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் நிஷன் மதுசங்கா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமல் - சரித் அசலங்கா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சண்டிமல் 49 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.