ஐபிஎல் 2022: முதல் ஓவரிலேயே ஓபனர்களை வீழ்த்திய முகேஷ் சௌத்ரி!

Updated: Thu, Apr 21 2022 20:18 IST
MI vs CSK : Mukesh Choudhary took 3 MI wickets early (Image Source: Google)

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே இந்த சீசனில் படுமோசமாக ஆடிவரும் நிலையில், இன்றைய போட்டியில் இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கியுள்ளன.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  சிஎஸ்கே அணி 2 மாற்றங்களுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியது.

அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையுமே முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகேஷ் சௌத்ரி. 

பேபி ஏபி என்றழைக்கப்படும் இளம் அதிரடி வீரர் டிவால்ட் ப்ரீவிஸை தனது அடுத்த ஓவரான இன்னிங்ஸின் 3ஆவது ஓவரில் வீழ்த்தினார் முகேஷ் சௌத்ரி.

23 ரன்களுக்கே மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மிட்செல் சாண்ட்னரிடம் விக்கெட்டை இழந்தார்.

இதனால் 47 ரன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வாருகிறது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக பந்துவீசிவருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை