நான் அப்படி செய்ததில் உலகக் கோப்பைக்கு எந்த அவமரியாதையும் இல்லை - மிட்செல் மார்ஷ்!

Updated: Fri, Dec 01 2023 10:42 IST
நான் அப்படி செய்ததில் உலகக் கோப்பைக்கு எந்த அவமரியாதையும் இல்லை - மிட்செல் மார்ஷ்! (Image Source: Google)

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. குறிப்பாக ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய அந்த அணி அதன் பின் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஃபைனலில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று உச்சகட்ட ஃபார்மில் எதிரணிகளை பந்தாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை 240 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. ஆனால் அதற்காக கொடுக்கப்பட்ட வெற்றிக்கோப்பை மீது நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் கால் மீது கால் போட்டு கொண்டாடியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

குறிப்பாக முழு திறமையை வெளிப்படுத்தி கடினமாக போராடிய உழைப்பிற்கு கிடைத்த பரிசு மீது இப்படியா காலை போடுவீர்கள் என்று நிறைய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக தலை மீது வைத்து கொண்டாட வேண்டிய கோப்பையின் மீது நீங்கள் கால் போட்டது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என இந்திய வீரர் முகமது ஷமி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

அதே சமயம் இதற்கு முன் கால்பந்து ஆட்டத்தில் நிறைய ஜாம்பவான்கள் இதே போல கொண்டாடியதால் மிட்சேல் மார்ஷ் அப்படி செய்ததில் எந்த தவறுமில்லை என்று மற்றொரு தரப்பு ஆதரவும் தெரிவித்தது. இந்நிலையில் அந்த புகைப்படத்தில் இருப்பது போலவும் அனைவரும் நினைப்பது போலவும் உலக கோப்பைக்கு அவமரியாதை செய்யும் எண்ணத்துடன் கால் போடவில்லை என்று மிட்சேல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அந்த புகைப்படத்தில் உலகக் கோப்பைக்கு எந்த அவமரியாதையும் இல்லை என்பது தெளிவாகிறது. நான் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. இந்த விவகாரத்தில் நான் செல்லவில்லை. ஏனெனில் நான் அதிகமாக சமூக வலைத்தளங்களை பார்ப்பதில்லை. இந்த விஷயத்தில் எதுவுமே இல்லை. உலகக் கோப்பையை வென்றதும் நாடு திரும்பாமல் ஆறு வீரர்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் தங்கி விளையாட வேண்டி இருந்தது. இது மிகவும் கடினமான செயல். ஆனாலும் நாம் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுகிறோம். 

மேலும் இந்தியாவுக்கு எதிரான தொடர் என்றால் அது எப்பொழுதும் பெரியது. இன்னொரு பக்கத்தில் வீரர்களை மனிதர்களாக எடுத்துப் பார்த்தால், இந்த உலகக் கோப்பையை வென்றதை அவர்கள் கொண்டாட நாடு விரும்பி தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருந்திருக்கலாம். இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பெரிய தொடர்களுக்கு பிறகு போட்டிகள் இருக்காது என்று நீங்கள் நம்புவீர்கள். ஆனால் இங்கேயே தங்கிய 6 வீரர்களுக்காக நான் கொண்டாடினேன். அவர்களுக்காக கொண்டாடினேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை