விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பெங்கால் மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற  பெங்கால் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஹரியானா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஹரியானா அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த பார்த் வாட்ஸ் - நிஷாந்த் சிந்து இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்த, ஹரியானா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதில் அதிகபட்சமாக நிஷாந்த் சிந்து 64 ரன்களையும், பார்த் வாட்ஸ் 62 ரன்களையும் சேர்த்தனர். பெங்கால் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்கால் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் போரல் 57 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சுதிப் குமாரும் 36 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களில் அனுஸ்டுப் மஜும்தார் 36 ரன்களையும், கரண் லால் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பெங்கால் அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 226 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஹரியானா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

 

இந்நிலையில் இப்போட்டியில் பெங்கால் அணி தோல்வியடைந்திருந்தாலும், அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி இப்போட்டியில் 10 ஓவர்களை வீசிய முகமது ஷமி 61 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முன்னதாக காயம் காரணமாக ஓராண்டுக்கு மேலாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

Advertisement

சமீபத்தில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷமி, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். மேற்கொண்டு அடுத்த மாதம் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில் ஷமி தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முகமது ஷமி விக்கெட்டுகளை கைப்பற்றும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News