மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

Advertisement

இதில் அரைசதம் கடந்து அசத்திய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த நிதீஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இறுதியில் நிதீஷ் ரெட்டி 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டனது. அதன்பின் தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

நேற்றைய நாள் முடிவில் நிதீஷ் குமாரின் குடும்பத்தினர் அவரை ஹோட்டலில் சென்று சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நிதிஷ் ரெட்டியின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது நிதிஷ் ரெட்டியின் தந்தை முத்யாலா ரெட்டி சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து வழங்கினார். 

அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தின்ரும் சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர். இந்நிலையில் நிதிஷ் ரெட்டியின் குடும்பத்தினர் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து வழங்கிய காணொளி தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டி குறித்து பேசினால், ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News