ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 65ஆவது போட்டியில் விராட் கோலி அற்புதமான அதிரடி சதத்தை சன் ரைசர்ஸ் அணிக்காக எடுத்து வெற்றி பெற்றுக் கொடுத்ததோடு ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளார். மேலும், தான் தனது பிரதானமான ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக கோலி அறிவித்துள்ளார். 

Advertisement

விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 100 ரன்களை எடுத்து அபாரமாக விரட்டினார். விராட் கோலி பவர் ப்ளேவுக்குப் பிறகு மந்தமாக ஆடுகிறார் என்ற விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் . இந்நிலையில் எந்த வடிவத்திற்காகவும் தனது அடிப்படை பேட்டிங் உத்திகளை மாற்றிக் கொள்ளாமல் கோலி ஆடுவதுதான் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் அவரை ஒரு அபாயகரமான வீரராக உலக அணிகளுக்கு நினைக்க வைக்கின்றது.

Advertisement

கோலி ஒரு அனுபவமிக்க வீரராக தன்னுடைய பேட்டிங் பழைய முழுமைச் சிறப்புக்குத் திரும்பி விட்டது என்று தன்னம்பிக்கையுடன் கூறியிருப்பதுதான் மிக மிக முக்கியமானது. கோலி போன்ற ஒரு ஜாம்பவான் இத்தகைய தன்னம்பிக்கைக்குத் திரும்பியுள்ளது, உலக கிரிக்கெட்டில் ரிட்டையர் ஆகும் முன் ஒரு பெரிய 2ஆவது இன்னிங்ஸுக்கு அவர் தயார் என்பதையே காட்டுகின்றது.

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியாவுக்கு உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிப்போட்டி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “பெங்களூரில் நாங்கள் விளையாடிய போது விராட் கோலியிடம் பேசினேன். அவரது பேட்டிங் குறித்தும் அவரது கரியரில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்றும் பேசிக்கொண்டிருந்தோம். 

அப்போது அவர் என்னிடம் கூறியது என்னவெனில், தான் தனது முழுமையான பார்முக்குத் திரும்பிவிட்டேன் என்றார். அதைத்தான் நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான அவரது சதத்தில் நாம் பார்த்தோம். எனவே ஆஸ்திரேலியர்கள் எதிர்பார்க்கும் பரிசு விக்கெட் கோலியுடையதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியின் டாப் ஆர்டருக்கும் ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கும் எதிரான சுவாரஸ்யமான இறுதி போட்டியாக அது இருக்கும். பொதுவாக இந்திய ஸ்பின்னர்கள், ஆஸ்திரேலிய பேட்டர்கள் என்றுதான் போட்டி இருக்கும் இந்த முறை ஓவலில் பிட்ச் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும், 4 அல்லது 5-ம் நாளில் ஸ்பின் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News