PAK vs ENG, 2nd Test: இங்கிலாந்துக்கு 297 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!

Updated: Thu, Oct 17 2024 19:17 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியானது காம்ரன் குலாம் மற்றும் சைம் அயூப் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 366 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன்களையும், சைம் அயூப் 77 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் சதமடித்து அசத்திய நிலையில் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை மட்டுமே சேர்த்தது.  இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜேமி ஸ்மித் 12 ரன்களுடனும், பிரைடன் கார்ஸ் 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜேமி ஸ்மித் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பிரைடன் கார்ஸ் 4 ரன்னிலும், மேத்யூஸ் பாட்ஸ் 6 ரன்னிலும், ஷோயப் பஷீர் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் ஜேக் லீச் 24 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான் 7 விக்கெட்டுகளையும், நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியும் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. 

அதன்படி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் 4 ரன்னிலும், கேப்டன் ஷான் மசூத் 11 ரன்னிலும் என விக்கட்டை இழக்க, அவர்களைத் தொடர்ந்து சைம் அயூப் 22 ரன்னிலும், காம்ரன் குலாம் 26 ரன்னிலும், சௌத் சகீல் 31 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 23 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய ஆகா சல்மான் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

இறுதில் 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அகா சல்மான் விக்கெட்டை இழக்க, அவருடன் இணைந்து விளையாடி வந்த சஜித் கானும் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 221 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷோயப் பஷீர் 4 விக்கெட்டுகளையும், ஜேக் லீக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்களை பாகிஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்தது. 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் இலக்கை நோக்கி விளையடிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் ரன்கள் ஏதுமின்றியும், ஸாக் கிரௌலி 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ஒல்லி போப் - ஜோ ரூட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஒல்லி போப் 21 ரன்னுட்னும், ஜோ ரூட் 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான், நோமன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை