வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. காலையில் தொடங்க இருந்த இப்போட்டியானது போதிய வெளிச்சமின்மை காரணமாக டாஸ் நிகழ்வானது தாமதமானது. 

Advertisement

இதனால் இப்போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையானது எடுக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற டாஸ் நிகழ்வில் பாகிஸ்தான் அணி டாஸை வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்து விண்டீஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் மற்றும் முகமது ஹுரைரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அறிமுக வீரர் முகமது ஹுரைரா 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் ஷான் மசூத் 11 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்க்ள் பாபர் ஆசாம் 8 ரன்களுக்கும், காம்ரன் குலாம் 5 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 46 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் சகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவையான சமயங்களில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள சௌத் சகீல் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களையும், முகமது ரிஸ்வான் 7 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News