தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . ஆசியக் கோப்பைக்கு தயாராகும் விதமாக நடைபெறும் இந்த ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடி 300 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க  வீரர்களான இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் இருவரும் இணைந்து துவக்க விக்கெட்டிற்கு 227 ரன்களை சேர்த்தனர்.

Advertisement

இது பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஓபனிங் ஜோடி சேர்த்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதல் இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் மற்றும் ட்ராவஸ் ஹெட் ஜோடி 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 284 ரன்கள் குவித்தது சாதனையாக இருக்கிறது . இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 151 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 

இவருக்கு துணையாக நின்று விளையாடிய இப்ராஹிம் ஜதுரான் என்பதன்களில் ஆட்டம் இழந்தார். இறுதியில் முஹம்மது நபி அதிரடியாக விளையாடிய 29 ரன்கள் எடுக்க 50 ஓவர்களில் 300 ரன்கள் எட்டியது ஆப்கானிஸ்தான். இதனைத் தொடர்ந்து 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வலுவான நிலையில் இருந்தது. 

இறுதிக்கட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய சதாப் கான் 49 ஆவது ஓவரில் 16 ரன்களை விலாசினார். இதனால் இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான நசீம் ஷா இரண்டு பவுண்டரிகளை அடித்து அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். 

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான அணி கடுமையாக போராடி மீண்டும் ஒரு தோல்வியை பாகிஸ்தானிற்கு எதிராக பதிவு செய்திருக்கிறது. இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனியின் 18 வருட கால சாதனையை முறியடித்திருக்கிறார்.

Advertisement

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் எடுத்த ரஹ்மனுல்லா குர்பாஸ் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 151 ரன்கள் குவித்தார். இது ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எடுத்திருக்கும் அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னால் கேப்டனான மகேந்திர சிங் தோனி 2005 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் வைத்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் எடுத்த 148 ரன்கள் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த சாதனையை 18 வருடங்களுக்குப் பிறகு தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹ்மனுல்லாஹ் முறியடித்திருக்கிறார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News