இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தியா ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்ததால், இப்போட்டியில் டிரா செய்தாலே போதும் என்ற நிலை இருந்தது. 

Advertisement

முதலில் களமிறங்கிய இந்திய அணி 416/10 ரன்களை குவித்தது. ரிஷப் பந்த் 146 (111), ஜடேஜா 104 (194) ஆகியோர் சதம் கடந்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ 106 (140) மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்திருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 284/10 ரன்களை மட்டும் சேர்த்து, 132 ரன்கள் பின்தங்கியது.

Advertisement

மெகா முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் புஜாரா 66 (168), ரிஷப் பந்த் 57 (86) ஆகியோர் மட்டும் அரை சதம் கடந்த நிலையில், இந்தியா 245/10 ரன்களை மட்டும் சேர்த்து, இங்கிலாந்துக்கு 378 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

நான்காவது நாள், இரண்டாவது செஷனின்போது இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர்கள் அலேக்ஸ் லீஸ் 56 (65), ஜாக் கிரௌலி 46 (76) ஆகியோர் அசால்ட்டாக பவுண்டரிகளை விளாசி அசத்தினார்கள். அடுத்து ஒல்லி போப் டக் அவுட் ஆன நிலையில், ஜோ ரூட் , ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். இவர்களை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.

இறுதியில் இங்கிலாந்து அணி 378/3 ரன்களை சேர்த்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, தொடரை 2-2 என சமன் செய்துள்ளது. பேர்ஸ்டோ 114 (145), ரூட் 142 (173) ஆகியோர் கடைசிவரை களத்தில் இருந்தார்கள்.

இப்போட்டியில் தோற்றப் பிறகு பேசிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட், ‘‘இப்போட்டியில் முதல் 3 நாட்களும் ஆதிக்கம் செலுத்தினோம். 2ஆவது இன்னிங்ஸில் சரியாக பேட்டிங் செய்யவில்லை. கிடைத்த 2,3 வாய்ப்புகள் கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை. தென்னாப்பிரிக்க தொடரிலும் இதேபோல் கேட்ச் போன்ற 2 வாய்ப்புகள் கிடைத்தும் அதனை தவறவிட்டோம். இதனால்தான், தொடரை இழந்தோம். தற்போது இங்கிலாந்து தொடரிலும் இதே நிலைதான்.

Advertisement

கடந்த 2 வருடங்களாக டெஸ்டில், 20 விக்கெட்களையும் வீழ்த்தி வெற்றியைப் பெற்ற இந்திய அணியால், கடந்த 2 மாதங்களாக அதனை செய்ய முடியவில்லை. உடற்தகுதியை சரிவர பின்பற்ற முடியாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. பேட்டிங்கில் சிறப்பாக தொடங்கிவிட்டு, அதனை முடிக்க முடியாமல் திணறுகிறோம்” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News