ஐசிசி சமபியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி, முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டன் 103 ரன்களையும், அணியின் கேப்டன் டெம்பா பவுமா 58 ரன்களையும், ரஸ்ஸி வேன்டர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ரம் தலா 52 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 90 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அபாரமான சிக்ஸரை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினர். அதன்படி இன்னிங்ஸின் 35ஆவது ஓவரை லுங்கி இங்கிடி வீசிய நிலையில் மூன்றாவது பந்தை ஷார்ட் லெந்தில் வீசினார். அதனை சரியாக கணித்த ரஷித் கான் ஸ்கோயர் கட் ஷாட் மூலும் பேக்வேர்ட் பாய்ண்ட் திசையில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார்.

அதிலும் இப்போட்டியில் அவர் எதிர்கொண்ட முதல் பந்தும் அதுதான். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் ரஷித் கானின் இந்த அபாரமான சிக்ஸரை கண்டு மெய்சிலிர்த்தனர். இதனால் ரஷித் கான் ஒரு அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆஃப்கானை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 18 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் ரஷித் கான் விளாசிய இந்த சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News