இந்திய அணியிக் கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - ரவி சாஸ்திரி!

Updated: Mon, May 08 2023 19:29 IST
Ravi Shastri names interesting backup choice to KS Bharat in India's WTC final squad! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் ஏழாம் தேதி துவங்குகிறது. இதற்கான அணி ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது, நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் காயம் அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கே எல் ராகுல் விலகி இருக்கிறார். 

மேலும் உனட்கட் காயமடைந்து இருக்கிறார். இதையடுத்து கேஎல் ராகுலுக்கான மாற்று வீரராக இஷான் கிஷானை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. அதேசமயம் உனாத்கட் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாதமியில் உள்ளதால், அவர்களின் உடற்தகுதிப் பொறுத்தே மாற்று வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது இந்த வீரர்களுக்கு யார் மாற்று வீரர்கள் ஆக இருப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். கேஎல் ராகுல் இரண்டாவது விக்கெட் கீப்பராக அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, “கே எஸ் பரத் இப்பொழுது விளையாட வேண்டும். இங்கிலாந்தில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவதாக இருந்தால் ஒரு நல்ல விக்கெட் கீப்பர் உடன்தான் நாம் சென்றாக வேண்டும். இப்படி சென்று ஒரு அதிர்ச்சிகரமான அவசர நிலை ஏற்பட்டால் மாற்று விக்கெட் கீப்பர் உடனடியாகத் தேவை. 

இதற்கு ஒரு பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும். இதற்கு சர்பராஸ் கான் சரியானவராக இருப்பார். அவர் உள்நாட்டு தொடரில் ரன்களை குவித்து தன்னை நிரூபித்து இருக்கக்கூடியவர். உனட்கட்டுக்கு சரியான மாற்று அர்ஸ்தீப் சிங்தான். ஏனென்றால் அவர் பந்தை மிக நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். மற்றும் நல்ல சிவப்பு பந்து சாதனைகளையும் உள்நாட்டில் வைத்திருப்பவர். எனவே இவரது தேர்வு பல்வேறு வகைகளுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை