வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று  நவி மும்பையில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 217 ரன்களைக் குவித்தது. இதில் ஸ்மிருதி மந்தனா 77 ரன்னும், ரிச்சா கோஷ் 54 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 39 ரன்னும், ராகவி பிஸ்ட் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Advertisement

இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து களமிறங்கியது. அந்த அணியின் சின்னெலே ஹென்றி 16 பந்தில் 43 ரன்கள் குவித்ததை தவிர்த்து மற்ற வீராங்களை சோபிக்க தவறினர்.  இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் இந்த டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் ஆட்டநாயகி விருதையும், இத்தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அரைசதம் கடந்து அசத்திய இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தொடர் நாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீராங்கனை ரிச்சா கோஷ் 18 பந்துகளில் ரைசடஹம் கடந்து அசத்தியதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதத்தைப் பதிவுசெய்த வீராங்கனை எனும் சோஃபி டிவைன், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஆகியோரின் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்பின் ஆஸ்திரேலிய அணியின் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் கடந்த 2023ஆம் ஆண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், தற்போது ரிச்சா கோஷும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அவர்களின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு இந்திய அணி தரப்பிலும் அதிவேக டி20 அரைசதத்தைப் பதிவுசெய்த வீராங்கனை எனும் பெருமையையும் ரிச்சா கோஷ் பெற்றுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News