Rishabh Pant Record: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 2 கேட்சுகளை பிடித்ததன் மூலம் இங்கிலாந்தில் விக்கெட் கீப்பராக அதிக கேட்சுகளை பிடித்த ஆசிய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டதுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனைப் பட்டியலிலும் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் காம்ரன் அக்மலின் சாதனையையும் முறியடித்துள்ளார். 

Advertisement

அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை வீசிய நிதிஷ் குமார் ரெட்டி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் மற்றும் ஸாக் கிரௌலி ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். அதிலும் குறிப்பாக அந்த இருவரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் தங்களது கேட்சுகளைக் கொடுத்து விக்கெட்டுகளை இழந்திருந்தார். 

இந்நிலையில் ரிஷப் பந்த் இந்த இரண்டு கேட்சுகளை பிடித்ததன் மூலம், இங்கிலாந்தில் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகளை எடுத்த விக்கெட் கீப்பார் எனும் காம்ரன் அக்ரமின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். முன்னதாக பாகிஸ்தானின் காம்ரன் அக்ரம் 16 இன்னிங்ஸ்களில் 39 கேட்சுகளை பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது ரிஷப் பந்த் 22 இன்னிங்ஸ்களில் 40 கேட்ச்சுகளை பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் கேட்சுகளை பிடித்த ஆசிய விக்கெட் கீப்பர்கள்

  • 40* - ரிஷப் பன்ட் (22 இன்னிங்ஸ்)
  • 39 - கம்ரான் அக்மல் (16 இன்னிங்ஸ்)
  • 36 - எம்.எஸ். தோனி (19 இன்னிங்ஸ்)
  • 35 - வாசிம் பாரி (26 இன்னிங்ஸ்)
  • 25 - சர்ஃபராஸ் அகமது (11 இன்னிங்ஸ்)

முன்னதாக இந்தப் போட்டியின் போது, ​​ரிஷப் பந்த் காயத்தை சந்தித்தார். இதன் காரணமாக அவர் மைதானத்தை விட்டும் வெளியேறினார். இதன் காரணமாக அணியின் தாற்காலிக விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் செயல்பட்டு வருகிறார். இருப்பினும் ரிஷப் பந்தின் காயம் குறித்து தற்போது வரையிலும் முழுமையான தகவல் வெளியாகாததால், இன்றைய தினம் அவர் விக்கெட் கீப்பிங் செய்வாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர். இந்திய அணி தரப்பில் நிதிஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர். 

Also Read: LIVE Cricket Score

இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.    

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News