எனது ஆட்டத்தை பார்த்து எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ரோஹித் சர்மா!

Updated: Sat, Sep 24 2022 09:56 IST
Rohit Sharma admitted that he was surprised by his innings against Australia (Image Source: Google)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மழை காரணமாக ஆட்டம் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது .இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா விளையாடினார்.

ஆட்டம் தொடங்கியதுமே ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 15 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். இதில் நான்கு பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பிஞ்சின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தி அசத்தினார். 

இதனை தொடர்ந்து கேமிரான் கிரீன், மேக்ஸ்வெல் , டிம் டேவிட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இறுதி கட்டத்தில் மேத்தீவ் வெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 பந்துகளுக்கு 43 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி எட்டு ஒவ்வொரு முடிவில் 90 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியை காட்டியது முதல் ஓவரிலேயே 20 ரன்கள் குவிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா பட்டையை கிளப்பி 4 பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் விளாசி 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார் .இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.

இந்திய அணி 4 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இது குறித்து கருத்து தெரிவித்த ரோகித் சர்மா, "என்னுடைய பேட்டிங்கை கண்டு எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நான் இப்படி அடிப்பேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஷாட்கள் ரன்களாக மாறியது எனக்கு மகிழ்ச்சியே. கடந்த எட்டு ,ஒன்பது மாதங்களாக நான் இப்படித்தான் விளையாடி வருகிறேன்.

என்னுடைய பேட்டிங் குறித்து நான் பிளான் செய்வது கிடையாது. களத்தில் நான் இருக்கும் நேரமும் சிறிதாகவே இருக்கும். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களும் ஒரு கட்டத்தில் சிறப்பாக வந்து வீசி நெருக்கடி அளித்தனர். போட்டி நடக்க கடுமையாக ஆடுகள பராமரிப்பாளர்கள் உழைத்தனர். அவர்கள் மதியம் 1.30 மணியில் இருந்து பணிபுரிந்து போட்டியை நடக்க உதவினர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்று ரோகித் சர்மா கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை