இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

Advertisement

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பும்ராவின் அபாரமான பவுலிங்கில் மண்டியிட்டு சரணடைந்தது. 25.2 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

பும்ரா அபாரமாக பந்துவீசி 7.2 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது பெஸ்ட் பவுலிங்கை பதிவு செய்தார்.

இதையடுத்து 111 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி இலக்கை எட்டினர். அதன்படி 18.4 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

பொதுவாக அசால்ட்டாக சிக்ஸர்களை அடிப்பதில் வல்லவரான ரோஹித் சர்மா, இந்த போட்டியிலும் சில சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஷார்ட் பிட்ச் பந்துகளை சிக்ஸர் அடிப்பது ரோஹித்துக்கு கை வந்த கலை. அந்தவகையில், இன்னிங்ஸின் 5ஆவது ஓவரில் டேவிட் வில்லி வீசிய அந்த ஓவரின் 3ஆவது பந்தை தனது டிரேட்மார்க் புல் ஷாட்டை ஆடி சிக்ஸர் விளாசினார்.

 

Advertisement

ரோஹித் சிக்ஸர் அடித்த அந்த பந்து, ஸ்டேடியத்தில் இருந்த ஒரு சிறுமியை தாக்கியது. ரோஹித்தின் சிக்ஸரில் அடி வாங்கிய அந்த சிறுமி வலியால் துடிக்க, அவரை அழைத்துவந்தவரும், மற்றவர்களும் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். 

மேலும் உடனடியாக இங்கிலாந்து அணியின் மருத்துவர்கள் அந்த சிறுமிக்கு மருத்துவ சிகிச்சையளித்தனர். இதனால் ஆட்டம் சற்று நேரம் தாமதமானது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News