இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 173 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனை அடுத்து இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதனை இந்திய அணி செய்தபோது ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தனர். அப்போது சுப்மன் கில் அடித்த பந்து ஸ்லிப் திசையில் சென்றது. அதனை கிரீன் பிடித்தார். கேட்சா? இல்லையா? என்பது குறித்த முடிவுகள் மூன்றாவது நடுவருக்கு சென்றது.

Advertisement

2-3 முறை ரிப்ளைவில் பார்த்ததில் சரியாக தெரியவில்லை. ஆகையால் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் முடிவுகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக கொடுக்கப்படும். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாம் நடுவர் அவுட் என்று கொடுத்துவிட்டார். அதன் பிறகு வெளிவந்த புகைப்படங்களில் பந்து தரையில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதனால் ஷுப்மன் கில் விக்கெட் விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியது.

பலரும் மூன்றாம் நடுவர்களை விமர்சித்த வரும் நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி கோப்பையையும் இழந்தது. போட்டி முடிந்தபிறகு, ஷுப்மன் கில்லுக்கு அவுட் என்று கொடுத்த 3ஆம் நடுவரின் முடிவு கொடுத்து ரோகித் சர்மா விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் போன்ற போட்டிகளில் பத்து விதமான கோணங்களில் முடிவுகள் பார்க்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. ஆனால் இங்கு இரண்டு மூன்று முறை பார்க்கப்பட்டு அதுவும் உறுதியில்லாத சமயத்தில் எப்படி பவுலிங் அணிக்கு சாதகமாக முடிவுகள் கொடுத்திருக்க முடியும். 100% உறுதியாக இல்லாத ஒன்றில் இப்படி அவுட் என்று கொடுத்திருப்பது சற்றும் முறையற்றது. 

உலகத்தரம் மிக்க போட்டியில் இப்படிப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படுவது எவ்வளவு பெரிய விளைவை கொடுத்திருக்கிறது. மிகவும் ஏமாற்றம் அளிகிறது. அதுவும் இத்தனை கேமராக்கள் இருந்தும் முடிவுகள் இப்படி கொடுக்கப்பட்டது மிகப்பெரிய வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News