2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த டி20 வீரர் விருத்துக்கான பரிந்துரையில் சூரியகுமார் யாதவ், சிக்கந்தர் ராசா, சாம் கர்ரன் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய நான்கு வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். இந்த விருது யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. பெரும்பாலும் இந்த விருது சூரியகுமார் யாதவ் தட்டிச்செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ஏனெனில் இந்த ஆண்டு 32 டி20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இவரது சராசரி 46.56 ஆகும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இவரது ஸ்ட்ரைக் ரேட் 188 ஆகும். 68 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் அடித்திருக்கிறார். இத்துடன் இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி டி20 ரேங்கிங்கிலும் முதல் இடத்தில் இருக்கிறார். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்றாவது அதிகபட்ச ரன்களை அடித்திருக்கிறார்.

Advertisement

இந்த பட்டியலில் இருக்கும் மற்ற வீரர்களையும் குறித்து எடை போட முடியாது. சாம் கரன் டி20 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றார். இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வெல்வதற்கு மிக முக்கிய பங்காற்றினார். அத்துடன் 6.25 எக்கனாமி உடன் 13 விக்கெடுகளையும் உலக கோப்பையில் கைப்பற்றி இருக்கிறார். இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 25 விக்கெடுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார். 10 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பான பந்துவீச்சாக இருக்கிறது. இவரும் சூரியகுமார் யாதவிற்க்கு நல்ல போட்டியை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த விருது கட்டாயம் சூரியகுமார் யாதவிற்கு தான் செல்லும். அவர்தான் இதற்கு தகுதியானவர் என சபா க்ரீம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சாம் கரன், சூரியகுமார் யாதவிற்க்கு கடுமையான போட்டியாக இருக்கிறார். டி20 உலக கோப்பையை வைத்து குழுவினர் முடிவு எடுத்தால் நிச்சயம் சாம் கர்ரன் வெற்றியாளராக இருப்பார். ஆனால் வருடம் முழுவதும் பார்த்தால் இந்த விருதை சூரியகுமார் யாதவ் பெறுவார். ஏனெனில் ஓட்டுமொத்த டி20 போட்டிகளையும் வேறு ஒரு கோணத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

உலக கோப்பையை வென்றிருந்தால் சந்தேகத்திற்கு இடம் இன்றி அவருக்குத்தான் கிடைத்திருக்கும். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை. சாம் கரனை நாம் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் தகுதியானவர். வருடம் முழுவதையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News