ரஞ்சிக் கோப்பை தொடர் இன்று துவங்கி, பிப்ரவரி 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்றைய லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் கேப்டனாக இருக்கும் கேரள அணியும், ஜார்கண்ட் அணியும் மோதின.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு கேரள அணியின் கேப்டன் சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இருப்பினும், சாம்சன் ஓபனராக களமிறங்கவில்லை. அந்த அணி களத்திற்குள் வந்த பிரேம் 79 ரன்களையும், கம்முமல் 50 ரன்களையும் சேர்த்து தொடர்ந்து அபாரமாக விளையாடி அடித்தளம் அமைத்தனர்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய சோன் ரோஜர் ஒரு ரன்னிலும், சச்சின் பேபி ரன் ஏதுமின்றியும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்கள். இதனைத் தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன், அக்ஷை சந்திரன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார்கள்.

சந்திரன் நிதானமாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதனால், ஸ்கோர் மளமளவென உயர ஆரம்பித்தது. இதனால் இப்போட்டியில் சதமடித்து அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் மொத்தம் 108 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 72 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததுடன், சதமடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.


சாம்சன் ஆட்டமிழந்தப் பிறகு அக்ஷை சந்திரன் 39 ரன்னிலும், சிஜோமோன் 28 ரன்னிலும் களத்தில் இருக்கிறார்கள். இதன்மூலம் முதல் நாள் ஆட்டம் நேர முடிவுக்கு கேரள அணி 6 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்களைச் சேர்த்துள்ளது. ஜார்கண்ட் அணி தரப்பில் ஷபாஸ் நதீம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், சாம்சன் அடித்த ஒவ்வொரு சிக்ஸரும் பிசிசிஐக்கு பதிலடியாக பார்க்கிறோம் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். சாம்சன் சரியான பார்மில் இருக்கும் நிலையில், தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பந்திற்குதான் ரெகுலராக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. 

Advertisement

இதனால்தான், சாம்சன் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தனது ஃபார்மை நிரூபித்து, அணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். இந்நிலையில், முதல் போட்டியின் முதல் இன்னிஸ்லேயே இவர் அதிரடி காட்டியுள்ளார். இனி வரும் போட்டிகளிலும் சாம்சன் மிரட்டலாக விளையாடும் பட்சத்தில், இவரை பிசிசிஐ தவிர்க்கவே முடியாத நிலை ஏற்படும் என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News