டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில், பாகிஸ்தானை தொடர்ந்து நியூஸிலாந்துக்கு எதிரன ஆட்டத்திலும் இந்திய அணி படுதோல்வியை தழுவியது நாட்டு மக்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் அணியுடன் நீடிக்கும் தீராப்பகையை போலவே, கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வெளியேற்றியது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் தோற்கடித்தது என நியூஸிலாந்து அணியும் இந்திய ரசிகர்களை கொதிப்படையவே செய்திருந்தது. 

Advertisement

அதற்கெல்லாம் நேற்றைய ஆட்டத்தில் பழிதீர்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்துள்ளனர் இந்திய அணி வீரர்கள். விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் தான் என்றாலும், ஐசிசி தரவரிசையில் முன்னணியில் இருக்கும் ஒரு அணி, உலகளவில் அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெறும் ஒரு அணி, நூறு கோடிக்கும் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்திய அணி, மிக முக்கியமான ஆட்டங்களில் நிராயுதபானியாக வீழ்வது இந்தியர்களை கிரிக்கெட்டையே வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது. 

Advertisement

போட்டி அட்டவணைகள் கூட இந்திய அணிக்கே சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், ஒரு வார காலம் பயிற்சிக்கு நேரமிருந்தும் இந்திய வீரர்கள் நேற்றைய தினம் களத்தில் செயல்பட்ட விதம் பாகிஸ்தான் ரசிகர்களை தவிர ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கோபமடையச் செய்திருக்கிறது.

ஆடும் லெவனில் மற்ற பத்து வீரர்களும் சொதப்பினாலும், ராசியில்லாத கேப்டன் என்று மீண்டும், மீண்டும் விராத் கோலியே குறிவைக்கப்படுகிறார். இந்திய வீரர்களிடம் ஒட்டிக்கொண்டுள்ள பயமே அவர்களை தோல்வியின் பாதைக்கு அழைத்துச் செல்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக கேப்டன் விராத் கோலியும், நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் இந்திய வீரர்கள் துணிச்சலுடன் செயல்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

 

தொடர் தோல்விகளால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்ட நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் அணியாக உள்ள பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் இந்தியர்களை ஏளனம் செய்ய தொடங்கிவிட்டனர். வாழ்த்துகள் இந்தியா (Congratulations India) என பாகிஸ்தான் ரசிகர்கள் பதிவிடும் டிவீட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் இந்திய ரசிகர்கள் டுவிட்டரில் லாக் அவுட் செய்துவிட்டு தெறித்து ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Advertisement

ஒருபுறம் விராத் கோலி குறிவைத்து தாக்கப்படுவதை போலவே, மெண்டாராக நியமிக்கப்பட்ட தல தோனியும் இணைய தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் ஒரு வீரர் அடித்த சிக்சர்களை கூட ஒட்டுமொத்த இந்திய அணியும் அடிக்கவில்லை என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். 

மேலும் ஐபிஎல் தொடரில் பணம் அதிகம் கிடைப்பதால் இந்திய அணி வீரர்கள், அதில் மட்டுமே சிறப்பாக செயல்பட நினைப்பதாக குற்றஞ்சாட்டும் ரசிகர்கள், ஐ.பி.எல். தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 

ஏதாவது ஒரு சில வீரர்கள் சரியாக செயல்படாமல் இருந்தால் அவர்கள் பெயர்களை குறிப்பிட்டு ரசிகர்கள் வசைபாடி அந்த வீரர்கள் டிவிட்டரில் டிரெண்டாவது வாடிக்கையாகும். ஆனால் நேற்றை ஆட்டத்தில் 11 வீரர்கள், அணி நிர்வாகம் என அனைத்து தரப்புமே சொதப்பியதால் ட்விட்டர் முழுவதும் இந்திய அணி வீரர்கள் பெயர்கள் மற்றும் மெண்டார் தோனியின் பெயரும் டிரெண்டிங்கில் உள்ளது. 

Advertisement

 

Also Read: T20 World Cup 2021

இதற்கிடையில் இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் தனது பதிவில்,“இந்தியா ஒரு சிறந்த அணி என்று நான் இன்னும் நம்புகிறேன், அது ஒரு நல்ல நேரம் அல்லது கெட்ட நேரம் ஒரு விஷயம் ஆனால் வீரர்களையும் அவர்களது குடும்பத்தையும் விமர்சனம் செய்வது மிகவும் அவமானமான செயல். கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News