ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களது முதலிரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் நாளை பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.   

Advertisement

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக டெங்கு காய்ச்சல் காரணமாக இந்திய அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் திரும்பினார். அப்போது டெங்கு காய்ச்சல் வந்து, குணமடைந்தாலும் 10 நாட்களுக்கு அவரால் பயிற்சியில் ஈடுபட முடியாது என பல செய்திகள் வலம் வந்தன. 

Advertisement

மேலும், ஷுப்மன் கில்லை அணியில் இருந்தே நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்யும் என்ற தகவலும் கூறப்பட்டது. இந்தியா அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட உள்ள நிலையில், அதில் ஷுப்மன் கில் விளையாட வாய்ப்பே இல்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால், ஷுப்மன் கில் சென்னையில் இருந்து நேராக பாகிஸ்தான் போட்டி நடக்கும் அஹ்மதாபாத்துக்கு சென்று, பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இதுகுற்டதது பேசிய எம்எஸ்கே பிரஷாத், "எல்லாவிதமான ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சுப்மன் கில் கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவார். அவர் மிகவும் நல்ல வீரர். அவரால் அணிக்கு இழப்பு தான். அவருக்கு வெறும் காய்ச்சல்தான் இருந்தது. அதில் இருந்து குணமடைந்தார். அது மோசமானதாக இல்லை. மாற்று வீரர்களை பற்றி யாரும் யோசிக்கவே இல்லை. நீங்கள் கேட்டது அனைத்தும் வதந்திகள் தான்.

நாங்கள் கேள்விப்பட்டது என்னவென்றால், முன்னெச்சரிக்கையாக, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனால் அவரால் இரண்டாவது போட்டியில் ஆட முடியவில்லை. அவர் முன்னெச்சரிக்கையாக சென்னையில் மேலும் ஒரு நாள் தங்கினார். பின்னர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் 1 மணி நேரம் பயிற்சி செய்து இருக்கிறார். 

அப்படி என்றால் அவர் குணமடைந்துவிட்டார் என்று தானே அர்த்தம். அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கியமான ஆட்டம் உள்ளது. அவர் உடல்தகுதியுடன் நிச்சயமாக இருக்கிறார், அவர் இந்தியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News