ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்றது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisement

அதில் 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பின் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஓய்வெடுத்த ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக களமிறங்க உள்ளார். சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில் ஆரம்பத்திலேயே அதிரடியாக எதிரணி பவுலர்களை பந்தாடிய அவர் 597 ரன்கள் குவித்து முழுமூச்சுடன் இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

Advertisement

குறிப்பாக தம்முடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடுவதற்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து சுயநலமின்றி விளையாடும் வீரராக ரோஹித் சர்மாவை தாம் பார்ப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “2023 உலகக் கோப்பை தோல்வி அவரை சற்று சுரண்டலாம். கடந்த 10 – 18 மாதங்களில் ரோகித் சர்மாவை பற்றி கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாக நான் பார்த்த தன்னலமற்ற இந்திய வீரராக அவர் இருக்கிறார். அவர் அணி வெல்வதற்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு தேவையான வழியை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார். 

உலகக் கோப்பையில் அவர் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடியதால் மிடில் ஆர்டரில் விளையாடிய வீரர்கள் தாங்கள் விரும்பிய வழியில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர். எனவே டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறிய மாற்றம் செய்தால் போதும். பெரிய மாற்றங்கள் தேவையில்லை. இந்த டெஸ்ட் தொடரிலும் நான் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவதை விரும்புகிறேன். அதை நாம் இந்த டெஸ்ட் தொடரில் பார்ப்போம் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News