முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஸ்மிருதி மந்தனா அபார சதம்; இலங்கை அணிக்கு 243 டார்கெட்!

Updated: Sun, May 11 2025 13:45 IST
Image Source: Google

இறுதியில் இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தியது. 

கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை சிறப்பான ஆட்டத்தி வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரதிகா ராவல் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் ஒருபக்கம் நிதானமாக விளையாட மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 116 ரன்களைச் சேர்த்த கையோடு மந்தனா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்லீன் தியோலும் 47 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: LIVE Cricket Score

இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, ரிச்சா கோஷ் 8 ரன்காளுக்கும் என ஆட்டமிழந்தார். இறுதியில் அமஞ்சோத் கவுர் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தா தீப்தி சர்மா 20 ரன்களையும் சேர்த்தனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மல்கி மதரா, தெவமி விஹங்கா, சுகந்திகா குமாரி உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை