வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164/5 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 11* (5) ரன்கள் எடுத்திருந்தபோது காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்டாகி சென்றார். அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

Advertisement

அவருடன் மெதுவாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 (44) ரன்களை வெளுத்து வாங்கி வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார். 

Advertisement

அதன் காரணமாக 19 ஓவரிலேயே 165/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருந்த இத்தொடரில் மீண்டும் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 76 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆனால் அவருடன் வெறும் பெயருக்காக கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த ஸ்ரேயஸ் ஐயர் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

குறிப்பாக ரோஹித் சர்மா காயத்தால் வெளியேறியதும் சூர்ய குமாருடன் ஜோடி சேர்ந்த அவர் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி வெற்றியை உறுதி செய்தாலும் ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் ஒரு கட்டத்துக்கு பின் அதிரடியை தொடங்கினார்.

ஆனால் கடைசி வரை அதிரடியே காட்டாமல் 27 பந்துகளை சந்தித்து வெறும் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களை 88.89 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் முக்கிய நேரத்தில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானது சூரியகுமாரின் அற்புதமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு தோல்வியை கொடுக்காமல் தப்பிக்க வைத்தது.

இது மட்டுமல்லாமல் சமீபத்திய இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியிலும் இதேபோல் 31/3 என இந்தியா தடுமாறிய போது சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த இவர் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதில் சூர்யகுமார் யாதவ் 117 (55) ரன்களை தெறிக்கவிட்டு வெற்றிக்காக போராடினார். ஆனால் கடைசிவரை அதிரடியே காட்டாமல் வெறும் பெயருக்காக 28 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் அன்றைய நாளில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க முக்கிய காரணமாக இருந்தார்.

Advertisement

அதன் காரணமாகவே இவருக்கு பதில் சமீபத்திய அயர்லாந்து டி20 மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்களில் அசத்திய சஞ்சு சாம்சன், தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பளிக்குமாறு நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஸ்ரேயஸ் ஐயர் தடுமாறுவார் எனத் தெரிந்தும் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது.

ஆனால் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட தவறி வரும் அவர் அதிரடியும் காட்டாமல் விரைவில் அவுட்டும் ஆகாமல் இப்படி டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால் அதிருப்தியடைந்து கலாய்க்கும் ரசிகர்கள் இன்னுமா இவரை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுவதுடன் டி20 கிரிக்கெட்டுக்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்ற கருத்துடன் அணியிலிருந்து நீக்குமாறு கேட்கிறார்கள்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News