இலங்கைக்கு சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி முதலாவது டெஸ்ட் காலேயில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 386 ரன்கள் குவித்தது.

Advertisement

இதில்தனது 15ஆவது சதத்தை எட்டிய கேப்டன் திமுத் கருணாரத்னே 178 ரன்களும் , 8ஆவது சதம் அடித்த குசல் மென்டிஸ் 140 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தினேஷ் சண்டிமல் 18 ரன்களுடனும், ஜெயசூர்யா 12 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

Advertisement

இதில் ஜெயசூர்யா 16 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த் தினேஷ் சண்டிமல் - சமரவிக்ரமா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் சதமடித்தும் அசத்தினர். 

இதன்மூலம் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 ரன்களை சேர்த்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் கடைசிவரை களத்தில் இருந்த சண்டிமல் 102 ரன்களையும், சமரவிக்ரமா 104 ரன்களையும் சேர்த்திருந்தனர். அயர்லாந்து தரப்பில் அதிகப்டசமாக கர்டிஸ் காம்பெர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணி தொடத்திலேயே முர்ரெ கம்மின்ஸ், கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் இனைந்த ஜேம்ஸ் மெக்கலம் - ஹேரி டெக்டர் இணை ஓரளவு சமாளித்து விக்கெட் இழப்பை சிறுது நேரம் தடுத்து நிறுத்தினர். 

பின் 35 ரன்களில் மெக்கலமும், 34 ரன்களில் ஹேரி டெக்டரும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பீட்டர் மூர், ஜார்ஜ் டக்ரெல் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Advertisement

இதில் லோர்கன் டக்கர் 21 ரன்களுடனும், ஆண்டி மெக்பிரைன் 5 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 474 ரன்கள் பின் தங்கிய நிலையில் அயர்லாந்து அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News