ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயண் மேற்கொப்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகலேவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

Advertisement

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியிலும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 ரன்களில் ஆட்டமிழக்க, கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்த பதும் நிஷங்கா இப்போட்டியில் வெறும் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

பின்னர் இணைந்த கேப்டன் குசால் மெண்டிஸ் - சதீரா சமரவிக்ரமா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 52 ரன்களுக்கு சமரவிக்ரமாவும், 61 ரன்களுக்கு குசால் மெண்டீஸும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா - ஜனித் லியானகே இணையும் பொறுப்பாக விளையாடியதுடன், இருவரும் அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். ஆனால் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்திருந்த லியானகே 50 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சரித் அசலங்கா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 97 ரன்களை மட்டுமே சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News