ஒருநாள் தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது - மொயீன் அலி!

Updated: Tue, Mar 14 2023 19:58 IST
Star English Allrounder Moeen Ali Hints At Quitting ODI Cricket After World Cup In India (Image Source: Google)

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டுமே விளையாடி வருகிறார். இவர் தற்போது வங்கதேச அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வந்தார். இதையடுத்து இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “எனக்குப் பல லட்சியங்கள் கிடையாது. ஆனால் உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் இடம்பெறவும் கோப்பையை வெல்லவும் விரும்புகிறேன். அதன்பிறகு பார்க்கலாம். இதனால் நான் ஓய்வு பெறுவேன் என்றோ ஓய்வு பெற மாட்டேன் என்றோ கூறவில்லை. 35 வயதில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் என்பதே மிகப் பெரியது. ஏதாவது ஒரு சமயத்தில் இது போதும் என நான் நினைக்கலாம். 

ஓய்வு பற்றி நான் முடிவெடுக்கவில்லை. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசித்துள்ளேன். புதிய வீரர்கள் அணிக்கு வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அணிக்கு எது முக்கியமோ அதைச் செய்ய வேண்டும். அதுவே நம்மை உலக சாம்பியனாக மாற்றும். டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை