இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடருக்கான இடம், தேதி ஆகியவற்றை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. 

Advertisement

அதன்படி, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளன. அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதன் காரணமாக இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்பு, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது ஓய்வுத் திட்டங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதில் அவர் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பது பற்றி யோசிக்கவில்லை என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியா ஸ்டீவ் ஸ்மித், 'என்னிடம் தற்போது ஓய்வு திட்டம் எதுவும் இல்லை. நான் இப்போது விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன், வரவிருக்கும் கோடை சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான சவால் மிகவும் கடினமாக இருக்கும். இந்திய அணி மிகவும் சிறப்பாக உள்ளது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலகின் சிறந்த டெஸ்ட் அணிகள். இரண்டு சிறந்த அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதைப் பற்றி நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “மேலும் நான் நான்கு ஆண்டுகளுக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாட திட்டம் வைத்துள்ளேன். உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருவதால், மற்ற வீரர்களைக் காட்டிலும் என்னால் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாட முடியும் என நினைக்கிறேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த ஒப்பந்தம் முடிந்த ஓராண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்று விளையாடுவது சிறப்பான விஷயமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

ஆஸ்திரேலிய அணிக்காக சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித் தனது பேட்டிங் திறமையினால் தற்போது உலகின் மிகச்சிறந்த பேட்டராக உருவெடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் அதில் 32 சதங்கள் மற்றும் 51 அரைசதங்கள் என 9,685 ரன்களைக் குவித்துள்ளார். அதிலும் இந்தியாவுக்கு எதிராக 19 போட்டிகளில் 37 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஸ்மித், 65.87 சராசரியில் 2,042 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 9 சதங்களையும், 5 அரைசதங்களையும் அவர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News